Tamil Wealth

நாவில் எச்சில் வரவைக்கும் மட்டன் பொடிமாஸ்!!

நாவில் எச்சில் வரவைக்கும் மட்டன் பொடிமாஸ்!!

நாம் ஏற்கனவே சிக்கனில் பொடிமாஸ் ரெசிப்பியினை பார்த்து இருக்கிறோம்.  அந்தவகையில் இப்போது நாம் நாவில் எச்சில் வரவைக்கும் மட்டன் பொடிமாஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையானவை:

மட்டன் - கால் கிலோ

பெரிய வெங்காயம் - 1

பூண்டு - 2

தேங்காய் துருவல் - 1 கப்

பொட்டுக்கடலை1/2 கப்

சோம்பு - 1 ஸ்பூன்

கசகசா - 1 ஸ்பூன்

மிளகாய் தூள் - 1 ஸ்பூன்

மல்லி தூள்1/4 ஸ்பூன்

மஞ்சள் தூள்1/2 ஸ்பூன்

பட்டை - 4 துண்டு

கிராம்பு - 6

உப்புதேவையான அளவு

கறிவேப்பிலை - தேவையான அளவு

எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

1. மட்டனுடன் உப்பு, மஞ்சள், தண்ணீர் சேர்த்து குக்கரில் 2 விசில் விட்டு இறக்கவும்.

2. அடுத்து வாணலியில் சோம்பு, பொட்டுக்கடலை, கசகசா சேர்த்து வதக்கி மிக்ஸியில் போட்டு பொடித்துக் கொள்ளவும்.

3. அடுத்து கறியை உதிர்த்துக் கொள்ளவும்.

4. அடுத்து, பொட்டுக்கடலை பொடி, மிளகாய் தூள், மல்லி தூள், மஞ்சள் தூள், உப்பு, தண்ணீர் சேர்த்து பிசையவும்.

5. அடுத்து ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி பட்டை, கிராம்பு, வெங்காயம், பூண்டு, கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.

6. இறுதியில் எலுமிச்சை சாறி பிழிந்து இறக்கவும்.

Share this story