Tamil Wealth

வீட்டில் இந்த செடிகளை வளர்த்தால் எப்போதும் வெற்றி தான்!

வீட்டில் இந்த செடிகளை வளர்த்தால் எப்போதும் வெற்றி தான்!

வீட்டில் செடிகள் வளர்ப்பது என்பது நல்ல விஷயம் தான். இவை மனதுக்குப் புத்துணர்ச்சி தரக்கூடியவையாக திகழ்கிறது. மேலும் சில செடிகள் நமக்கு நேர்மறை ஆற்றலை தருகின்றன. சில செடிகளில் இருந்து வருகிற வாசனை வீடு முழுக்க நிறைந்திருக்கும். அந்த வகையில் நாம் வீட்டில் வளர்க்கக் கூடிய செடிகளை பற்றி இப்போது பார்க்கலாம்.

  • வாடாமல்லி இதில் வாசனை எதுவும் இருப்பதில்லை தான். ஆனாலும், அந்த செடி எப்போதும் வாடுவதில்லை. அதுபோலவே வீட்டிலும் எப்போதும் மகிழ்ச்சி நிலைத்திருக்கும் என்பது நம்பிக்கை. பெரும்பாலும் வாடாமல்லியில் வாசனை இல்லாத காரணத்தால் நாம் வீடுகளில் அதை வளர்ப்பதில்லை.
  • மல்லிகையின் எப்போதும் மணம் பரப்பி மனதில் மகிழ்ச்சியை உண்டாக்கும். காதலை உச்ச நிலைக்குத் தூண்டி விடக்கூடிய ஆற்றல் மல்லிகைக்கு உண்டு. மேலும், அது நம்முடைய மனதை இலகுவாகவும் மகிழ்ச்சியாகவும் வைத்திருக்கும்.
  • துளசியை வேறு எந்த தாவரத்துடனும் ஒப்பிட முடியாது. துளசியிலிருந்து வெளிவருகிற வாசனை பெண்களின் கருப்பையை வளமாக வைத்திருக்க உதவுகிறது. துளசி இலை முதல் வேர் வரையிலும் மருத்துவ குணங்களை கொண்டது. அதனாலேயே துளசியை நாம் புனிதமான தாவரமாகக் கருதுகிறோம்.
  • மூங்கிலும் ஏராளமான மருத்துவ குணங்களைக் கொண்டிருக்கிறது. பெரும்பாலும் நாம் அனைவரும் மூங்கிலானது காடுகளில் வளரக்கூடிய தாவரமாகக் கருதுகிறோம். மாறாக மூங்கில் வளைந்து செழித்தோங்கும் தாவரம் என்பதால், வீட்டில் செல்வம் பெருகும் என்று வாஸ்து சாஸ்திரத்தில் கூறப்படுகிறது.

Share this story