Tamil Wealth

கடுக்காயை உடலின் பல பிரச்சனைகளுக்கும் பயன்படுத்தும் முறை பற்றி தெரியுமா?

கடுக்காயை உடலின் பல பிரச்சனைகளுக்கும் பயன்படுத்தும் முறை பற்றி தெரியுமா?

கடுக்காய் எளிதில் கிடைக்கக் கூடிய ஒரு பொருள் தான். நம் முன்னோர் காலத்திலிருந்து இதை நாட்டு மருந்தாக பயன்படுத்தி வருகின்றனர். கடுக்காயை பயன்படுத்தி உடல் உபாதைகளை சரி செய்யும் முறையை பற்றி இப்போது பார்க்கலாம்.

கடுக்காய் பயன்கள்:-

  • கடுக்காயை பொடியாக்கி மோரில் கலந்து காலை, மாலை என இரு வேளையும் குடித்து வந்தால் வயிற்றுப் போக்கை சரி செய்யும்.
  • கடுக்காய் பொடியை வெந்நீரில் கலந்து தினமும் இரவில் குடித்து வந்தால் செரிமான பிரச்சனை சரியாவதோடு மலச்சிக்கல் பிரச்சனையும் சரி ஆகும்.
  • உப்புடன் கடுக்காய் பொடியை சேர்த்து பல் தேய்த்து வந்தால் பற்கள் மற்றும் ஈறுகளில் ஏற்படும் வலி சரியாவது மட்டுமில்லாமல் வாய் துர்நாற்றம் சரியாகும்.
  • கடுக்காய் பொடியை பயன்படுத்தி தயாரிக்கப்படும் திரிபலா சூரணத்தை இதமான நீரில் சேர்த்து பருகி வந்தால் செரிமானம் மற்றும் வயிற்று பிரச்சனைகள் சரியாகும். கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் இவை மூன்றும் சேர்ந்த கலவையே திரிபலா சூரணம் எனப்படும்.

Share this story