Tamil Wealth

சிவப்பழகினைத் தரும் பப்பாளிப் பழ ஃபேஸ்பேக்!!

சிவப்பழகினைத் தரும் பப்பாளிப் பழ ஃபேஸ்பேக்!!

பப்பாளிப் பழத்தினை எடுத்துக் கொண்டால் பொதுவாக கண்பார்வைத் திறனானது அதிகரிக்கும். மேலும் இதனை ஃபேஸ்பேக்காகப் பயன்படுத்தினால் சிவப்பழகினைப் பெற முடியும்.

தேவையானவை:

பப்பாளிப் பழம்- ½

பால்- ½ கப்

முந்திரி- 4

பாதாம் பருப்பு- 4

செய்முறை:

  1. பப்பாளிப் பழத்தினை சிறு துண்டுகளாக்கிக் கொள்ளவும்.
  2. அடுத்து பாலில் முந்திரி மற்றும் பாதாம் பருப்பினை பாலில் ஊறவைத்துக் கொள்ளவும்.
  3. அடுத்து ஊறவைத்த முந்திரி, பாதாம் பருப்பு, பப்பாளிப் பழத்தினை மிக்சியில் போட்டு அரைத்துக் கொள்ளவும்.

இந்த பப்பாளிப் பழம் ஃபேஸ்பேக்கினை முகத்தில் அப்ளை செய்து நன்கு மசாஜ் செய்து கழுவினால் நிச்சயம் சிவப்பழகினைப் பெற முடியும்.

Share this story